Monday, January 14, 2013

சுனை நீர் - நடைவண்டித்தடம்...

என்னுடைய முதல் சிறுகதை தொகுதி... இது மார்ச் மாதமே வெளிவருவதாய் இருந்து பின்னால், எதிர்பாராத காரணங்களால் வெளியிட முடியாமல் போய் விட்டது.

இதற்காக பெரிதும் உழைத்த என் அன்பு நண்பர் மாதவராஜ் அவர்களுக்கும், இது வெளிவருவதில் என்னை விட ஆர்வமாய் இருந்த அகநாழிகை பொன்.வாசுதேவன் அவர்களுக்கும்  நான் என்றென்றும் அன்புடையவனாய்.

என்னை எழுத்துமூலம், கடிதம் மூலமாய் ஊக்குவித்த வண்ணதாசன் அவர்கள் முன்னுரை தர இசைந்தது, இந்த புத்தகத்திற்கு ஒரு மிகப்பெரிய அங்கீகாரம்.

என் கதைகளை வாசித்து என்னை ஓரளவு தேற்றியவர் என் வாத்தியார், ராஜசுந்தரராஜன் அண்ணன் அவர்களுக்கு என்னுடைய அன்பும் நன்றியும்.  என் இரண்டாவது தொகுப்பிற்கான முன்னுரையை ராஜசுந்தரராஜன் அண்ணன் எழுதியிருக்கிறார், அது ஏப்ரல் மாதம் வெளிவர இருக்கிறது.

என்னை வாசித்துக் குட்டிய, தட்டிய நண்பர்கள் எல்லோருக்கும் என்னுடைய அன்பும் நன்றிகளும்.

என் சிறுகதைத் தொகுப்பின் முகப்போவியம் வடிவமைத்தவர், அன்பு நண்பர் மயூரா இரத்தினசாமி அவர்கள்.  அவர்களுக்கு என் அன்பும் நன்றிகளும்.

உங்கள் பார்வைக்கு...