ஒரு முத்தத்தில்
விடிகிறது
புலர்காலை
பொழுது ஒன்று
உடலெங்கும்
குமிழ்கள் அழுந்தி
திறக்கிறது
நகக்கண்களின்
விழிப்பில்
ஒரு அரூபம்
திடப்படுகிறது
செவியோரம்
புருபுருக்கும்
மயிரிழைகள்
கூச்ச சங்கீதத்தை
சுரம் தப்பி
வாசிக்கிறது
நாணற்ற
இசைக்கருவி
மீட்டி
வெளிச்சப்பந்துகளை
இனைத்து பிண்ணிய
மாயகம்பளத்தில்
ஒத்தி எடுத்த
உதட்டு ரேகை வழி
புகுந்து கிளம்புகிறது
ஒரு நினைவறியாப்பயணம்
கீழே விரைந்து
கொண்டிருந்தது
மலைகளும்
பள்ளத்தாக்குகளும்
உந்திச்சுழி
உரோமக்கோட்டில்
வியர்வை
வழிந்த தடம்
மறந்து
வெப்பத்தில்
ஆவியாகும்
ஒரு
திசை
தொலைந்த
மழை ஞாயிறு
உள்ளங்கைகளுக்குள்
வசிக்க வரும்
தொடர்பற்ற
பெருவெளியில்
மிதக்கும்
உடல்களின் மீது
ஒற்றை இறகு
கொண்டு
ஏதோ ஒரு
பெயரறியா
வாசனையை
வரைய முற்படுகிறது
புணர்வறியாத
பகல் ஒன்று
Monday, November 23, 2009
Sunday, November 22, 2009
மரண அறிவித்தலும்....கொலைக்கான ஆயத்தங்களும்
வால் நீண்ட குருவி
நெகிழும் உறவின் தருனம்
இருள் தனிமை
ஒற்றை நிலா அல்லது மரம்
இப்படி ஏதாவது
ஒரு பாடுபொருளை
வீம்பாய் பிடித்துக் கொண்டு
எழுத முற்படும்போது
கவிதை மல்லாந்து விழுந்து
வாய் பிளந்து
மூச்சை விடுகிறது
கை பிசைந்து நிற்கிறேன்
சில நிமிடம்
பிறகு
நல்ல ஒரு தேர்ந்த தச்சனைக் கொண்டு
அலங்கார வேலைப்பாடுடன் கூடிய
ஒரு சவப்பெட்டி செய்கிறேன்
இறந்த கவிதையை
அதில் கிடத்தி
சீரிய உடுப்பு உடுத்தி
பூக்களைக்கொண்டு சுற்றி
அலங்கரிக்கிறேன்
முகத்தை மட்டும் விட்டு
முழுதாய் மூடுகிறேன்
எல்லோருக்கும்
தகவல் அனுப்புகிறேன்
சிலர் அனுதாபங்களுடன்
பூங்கொத்துக்களுடனும்
இன்னும் சிலர்
மலர்வளையங்களையும் வைத்து
சுற்றி வருகிறார்கள்
ஏதாவது தங்களுக்கு
தெரிந்ததை பகிர்ந்து கொள்கிறார்கள்
மோவாய் தாங்கி
என்னை உறுத்து நோக்குகிறார்கள்
சிலநேரம்
ஒன்றும் சொல்லாமல்
மௌனித்திருக்கிறார்கள்
நாற்றம் எடுக்காமல் இருக்க
யூடிகோலன் அடிக்கிறேன்
பிரேதத்தின் மீது
சமயம் வந்ததும் புதைத்து
விட்டு வருகிறேன்
உங்கள் ஆறுதல்களில் தேறி
அடுத்த கொலைக்கு
ஆயத்தமாகிறேன்....
ஜாக்கிரதை
சிக்குவது நீங்களாகவும் இருக்கலாம்
நெகிழும் உறவின் தருனம்
இருள் தனிமை
ஒற்றை நிலா அல்லது மரம்
இப்படி ஏதாவது
ஒரு பாடுபொருளை
வீம்பாய் பிடித்துக் கொண்டு
எழுத முற்படும்போது
கவிதை மல்லாந்து விழுந்து
வாய் பிளந்து
மூச்சை விடுகிறது
கை பிசைந்து நிற்கிறேன்
சில நிமிடம்
பிறகு
நல்ல ஒரு தேர்ந்த தச்சனைக் கொண்டு
அலங்கார வேலைப்பாடுடன் கூடிய
ஒரு சவப்பெட்டி செய்கிறேன்
இறந்த கவிதையை
அதில் கிடத்தி
சீரிய உடுப்பு உடுத்தி
பூக்களைக்கொண்டு சுற்றி
அலங்கரிக்கிறேன்
முகத்தை மட்டும் விட்டு
முழுதாய் மூடுகிறேன்
எல்லோருக்கும்
தகவல் அனுப்புகிறேன்
சிலர் அனுதாபங்களுடன்
பூங்கொத்துக்களுடனும்
இன்னும் சிலர்
மலர்வளையங்களையும் வைத்து
சுற்றி வருகிறார்கள்
ஏதாவது தங்களுக்கு
தெரிந்ததை பகிர்ந்து கொள்கிறார்கள்
மோவாய் தாங்கி
என்னை உறுத்து நோக்குகிறார்கள்
சிலநேரம்
ஒன்றும் சொல்லாமல்
மௌனித்திருக்கிறார்கள்
நாற்றம் எடுக்காமல் இருக்க
யூடிகோலன் அடிக்கிறேன்
பிரேதத்தின் மீது
சமயம் வந்ததும் புதைத்து
விட்டு வருகிறேன்
உங்கள் ஆறுதல்களில் தேறி
அடுத்த கொலைக்கு
ஆயத்தமாகிறேன்....
ஜாக்கிரதை
சிக்குவது நீங்களாகவும் இருக்கலாம்
Labels:
கவிதைகள்
Friday, November 20, 2009
அரணெனப்படுவது யாதெனின்....
முகப்பில்
தோட்டத்திற்காய்
இடம் விட்டு
கட்டிய சிறு வீடு
உள்ளிருந்தனர்
செட்டைக்குள் குஞ்சுகளாய்
என் இஷ்ட பந்துக்கள்
காய்கறிகளும், கனிகளும்,
பூக்களுமாய் கொல்லையும்
சிரித்தது
செழுமை ஊற
கிணறும் உண்டு
காபந்து பண்ணவேண்டி
சுற்றி சுவராய் எழு(ம்)ப்பினேன்
உள்ளே செடி, கொடிகளும்
அடை பறவைகளும்
விருத்திப் பெருகின
நாளாக
செடிகள், மரங்களாயின
சுவர் தாண்டி கிளைபரப்பி
வேர் நெடுகி
சுவர் அசைத்தன
சுவர் விரிந்து இடம்
கொடுத்தது
சுவரில் விழுந்த விதைகள்
முளைத்தன
சுவர் மேலும் நெகிழ்ந்தது
தோல் கழண்டு, எலும்பு
துருத்தி
தொட்டவுடன் உதிர்ந்தது
புறம்,
தேய்ந்து நலிந்தது சுவர்
பிள்ளைகள் வளர
சுவர் முழங்காலுக்குக்
குறுகியது
தாண்டுதல், தாவுதல்
எளிதானது
சுவரின் ஒளிவட்டத்தில்
நீர் ஊற்றி
அனைத்தது
விரைத்து கிடந்தது
அப்புறம்
ஒரு நாள்
இல்லாமல் போனது
மற்றொரு சுவர்
இன்னும் வலுவாய் கட்ட
ஆயத்தங்கள் நடந்தது.
தோட்டத்திற்காய்
இடம் விட்டு
கட்டிய சிறு வீடு
உள்ளிருந்தனர்
செட்டைக்குள் குஞ்சுகளாய்
என் இஷ்ட பந்துக்கள்
காய்கறிகளும், கனிகளும்,
பூக்களுமாய் கொல்லையும்
சிரித்தது
செழுமை ஊற
கிணறும் உண்டு
காபந்து பண்ணவேண்டி
சுற்றி சுவராய் எழு(ம்)ப்பினேன்
உள்ளே செடி, கொடிகளும்
அடை பறவைகளும்
விருத்திப் பெருகின
நாளாக
செடிகள், மரங்களாயின
சுவர் தாண்டி கிளைபரப்பி
வேர் நெடுகி
சுவர் அசைத்தன
சுவர் விரிந்து இடம்
கொடுத்தது
சுவரில் விழுந்த விதைகள்
முளைத்தன
சுவர் மேலும் நெகிழ்ந்தது
தோல் கழண்டு, எலும்பு
துருத்தி
தொட்டவுடன் உதிர்ந்தது
புறம்,
தேய்ந்து நலிந்தது சுவர்
பிள்ளைகள் வளர
சுவர் முழங்காலுக்குக்
குறுகியது
தாண்டுதல், தாவுதல்
எளிதானது
சுவரின் ஒளிவட்டத்தில்
நீர் ஊற்றி
அனைத்தது
விரைத்து கிடந்தது
அப்புறம்
ஒரு நாள்
இல்லாமல் போனது
மற்றொரு சுவர்
இன்னும் வலுவாய் கட்ட
ஆயத்தங்கள் நடந்தது.
Labels:
கவிதைகள்
Thursday, November 19, 2009
ஒரு கவிதை
எனக்கு
முன்பே
அறிமுகமானவர்
போல இருந்தவர்
எதிரில் வந்து கொண்டிருந்தார்
என்னை பார்த்ததும்
சிரிக்க நினைத்து
கையையும் உயர்த்தினார்
நானும்
சிரிக்க எத்தனித்து
கன்னச் சதையை
சிறிது தளர்த்தினேன்
கையையும் தூக்க
நினைத்தேன்
இதற்குள்
அவர் என்னை
கடந்து விட்டிருந்தார்
நானும்.
நல்லவேளை!
எந்த முகமனும்
தேவை இல்லாமல்
போய் விட்டது இருவருக்கும்.
முன்பே
அறிமுகமானவர்
போல இருந்தவர்
எதிரில் வந்து கொண்டிருந்தார்
என்னை பார்த்ததும்
சிரிக்க நினைத்து
கையையும் உயர்த்தினார்
நானும்
சிரிக்க எத்தனித்து
கன்னச் சதையை
சிறிது தளர்த்தினேன்
கையையும் தூக்க
நினைத்தேன்
இதற்குள்
அவர் என்னை
கடந்து விட்டிருந்தார்
நானும்.
நல்லவேளை!
எந்த முகமனும்
தேவை இல்லாமல்
போய் விட்டது இருவருக்கும்.
Labels:
கவிதைகள்
Monday, November 16, 2009
கிளி என்பது நானும்
வருவோரை எல்லாம்
வணக்கம் சொல்லி
வரவேற்கும்
மாரி பிஸ்கெட்டும்
சோளக்கருதும் தின்ன
பழகிவிட்டது
தொலைபேசி
மணிச்சத்தத்தையும்
அழைப்பு
மணிச்சத்தத்தையும்
எழுப்பி
ஏமாற்று வேலை பழகும்
கள்ளமாய் சிரிக்கவும்
கற்றுக்கொண்டு விட்டது
வேலைக்காரியை
வீட்டுக்காரியைப் போலவே
திட்டும்
ஹோம்வொர்க்
செய்யாத மகனை
முட்டாப்பய மகனே
என்று ஏசவும் செய்யும்
பூணையைக் கண்டால்
மட்டும்
குரலைப் பூட்டும்
தற்கொலைக்கு
முயன்ற கிளி
கயிற்றுத் தடம்
கழுத்தில்
அடிமை சோகம்
சொல்லும்
வருங்காலம்
சீட்டில் உணர்த்தும்
வகையும் மறந்த கதை
கூண்டு விட்டு கூண்டு
பாயும் குறக்களி வித்தையில்
என்னை ஜெயிக்கும்
வேலைக்காரி மீதான
சபலத்தை
மறைத்து
கிளி பற்றி
பயம் பழகும் என்
பிறன்மனை நோக்கா
பேராண்மை
வணக்கம் சொல்லி
வரவேற்கும்
மாரி பிஸ்கெட்டும்
சோளக்கருதும் தின்ன
பழகிவிட்டது
தொலைபேசி
மணிச்சத்தத்தையும்
அழைப்பு
மணிச்சத்தத்தையும்
எழுப்பி
ஏமாற்று வேலை பழகும்
கள்ளமாய் சிரிக்கவும்
கற்றுக்கொண்டு விட்டது
வேலைக்காரியை
வீட்டுக்காரியைப் போலவே
திட்டும்
ஹோம்வொர்க்
செய்யாத மகனை
முட்டாப்பய மகனே
என்று ஏசவும் செய்யும்
பூணையைக் கண்டால்
மட்டும்
குரலைப் பூட்டும்
தற்கொலைக்கு
முயன்ற கிளி
கயிற்றுத் தடம்
கழுத்தில்
அடிமை சோகம்
சொல்லும்
வருங்காலம்
சீட்டில் உணர்த்தும்
வகையும் மறந்த கதை
கூண்டு விட்டு கூண்டு
பாயும் குறக்களி வித்தையில்
என்னை ஜெயிக்கும்
வேலைக்காரி மீதான
சபலத்தை
மறைத்து
கிளி பற்றி
பயம் பழகும் என்
பிறன்மனை நோக்கா
பேராண்மை
Labels:
கவிதைகள்
Thursday, November 12, 2009
வாடகைக்கு....
இடமாறும்
கருப்பையில்
குறியைத்
தூக்கி போடும்
முன்னேற்பாடு
இல்லா
புணர்வு
கடனாய்
வழியும்
திமிறித் தெறியும்
விந்தில்
அப்பா, அம்மை
பாட்டனை
முதலாய்
சூல் வளர
ஊடு பிரியம்
உயிரைத்
திருப்பும்
மனசைக் கீறி
விதையைத்
தூவ
நன்னிலம்
புரண்டு படுக்கும்
அங்கம் குறை
அகழியில்
பேறு
அமிலத்தில்
உழலும்
ஜாமங்கள்
பிறாண்டும்
கழிவிரக்கம்
கண்களை
கவ்வும்
பிளவு வயிறு
துளிர்
தளிர்
உறவென்று….
கருப்பையில்
குறியைத்
தூக்கி போடும்
முன்னேற்பாடு
இல்லா
புணர்வு
கடனாய்
வழியும்
திமிறித் தெறியும்
விந்தில்
அப்பா, அம்மை
பாட்டனை
முதலாய்
சூல் வளர
ஊடு பிரியம்
உயிரைத்
திருப்பும்
மனசைக் கீறி
விதையைத்
தூவ
நன்னிலம்
புரண்டு படுக்கும்
அங்கம் குறை
அகழியில்
பேறு
அமிலத்தில்
உழலும்
ஜாமங்கள்
பிறாண்டும்
கழிவிரக்கம்
கண்களை
கவ்வும்
பிளவு வயிறு
துளிர்
தளிர்
உறவென்று….
Labels:
கவிதைகள்
Monday, November 09, 2009
உதிர்ந்த பூவும், நாளும்
மழை ஒரு நாளை
உதிர்ந்திருந்தது
ஒரு பூவையும்
அந்த ஒற்றைப் பூவையும்
நாளையும்
கையில் எடுக்கிறேன்,
நாள் நழுவி விழுந்து
கொண்டே இருந்தது
பூவை மட்டும் கையில் ஏந்தி
வண்ணத்துப்பூச்சியின்
இறகுகளுக்கு
ஒப்பான அதன்
வர்ணங்களை எடுத்து
என் மீது அப்பிக் கொள்கிறேன்
இப்போது அந்த பூ
ஒரு எழுதாத காகிதம் போல்
இருக்கிறது
மீண்டும் அதை செடியில்
பொருத்திப் பார்க்கிறேன்
பொருந்திக் கொள்கிறது
வர்ணத்தை தொலைத்திருந்தாலும்
பூவின் அடையாளம் செடிக்குள்
எங்கிருந்தோ வந்த
பறவை ஒன்று
உதிர்ந்து கிடந்த நாளின் மீது
உட்கார்ந்தது
அந்த நாளை அதன் அலகால் கவ்வி
நாளைக்குள் எடுத்து
போட்டு விட்டு
பறந்தது
உதிர்ந்த பூவும், நாளும்
இன்னும் மிச்சமிருக்கிறது நாளைக்கும்
உதிர்ந்திருந்தது
ஒரு பூவையும்
அந்த ஒற்றைப் பூவையும்
நாளையும்
கையில் எடுக்கிறேன்,
நாள் நழுவி விழுந்து
கொண்டே இருந்தது
பூவை மட்டும் கையில் ஏந்தி
வண்ணத்துப்பூச்சியின்
இறகுகளுக்கு
ஒப்பான அதன்
வர்ணங்களை எடுத்து
என் மீது அப்பிக் கொள்கிறேன்
இப்போது அந்த பூ
ஒரு எழுதாத காகிதம் போல்
இருக்கிறது
மீண்டும் அதை செடியில்
பொருத்திப் பார்க்கிறேன்
பொருந்திக் கொள்கிறது
வர்ணத்தை தொலைத்திருந்தாலும்
பூவின் அடையாளம் செடிக்குள்
எங்கிருந்தோ வந்த
பறவை ஒன்று
உதிர்ந்து கிடந்த நாளின் மீது
உட்கார்ந்தது
அந்த நாளை அதன் அலகால் கவ்வி
நாளைக்குள் எடுத்து
போட்டு விட்டு
பறந்தது
உதிர்ந்த பூவும், நாளும்
இன்னும் மிச்சமிருக்கிறது நாளைக்கும்
Labels:
கவிதைகள்
Sunday, November 08, 2009
மைதிலியின் தலைப்பிரசவம்
தலைப்பிரசவத்திற்கு
அம்மா வீடு
வந்தவள்
எங்க வீட்ல எல்லாம்
என்று
எதைப்பார்த்தாலும்,
கேட்டாலும், தொட்டாலும்
நீட்டி முழக்கினாள்
அடுக்குமல்லி மணக்கும்
புழக்கடை
அத்தைப் பிரியம்
அம்மாவை விஞ்சும்
மாமனார்
உள்ளங்கை அன்புத்தெப்பம்
மச்சினர் குழந்தைபோல
சிரிக்க, சிரிக்கப்பேசுவார்
பொழுது போறதே தெரியாது
இந்த புழுக்கம் அங்க இல்ல
கிணற்றடிப் பக்கம்
சிலுசிலுன்னு காத்து
வாசலில்
வண்டிச்சத்தம் இல்லை
தூசு இல்லை, புகை இல்லை
காலையில் தார்சால்
குருவி, மைனாக்களின்
கீச்கீச்சில் விடியும்
பெரிய மரத்தடியில் வீடு
வீட்டுக்குள் மரக்கன்றுகள்
சின்னதும் பெரிசுமா
வாசல தாண்டினா கோயில்
வருஷமெல்லாம் திருவிழா
சொல்லி சொல்லி
கதைகள் வளர்த்துக் கொண்டே
இருந்தாள்
ரசம் சாதம்,
பருப்புத்துவையல், சுட்ட அப்பளம்
அம்மா எடுத்து வைக்க
பிசைந்து உண்ணும்
மைதிலியின் தட்டில்
கொஞ்சம் கண்ணீர் துளிகளும்
அம்மா வீடு
வந்தவள்
எங்க வீட்ல எல்லாம்
என்று
எதைப்பார்த்தாலும்,
கேட்டாலும், தொட்டாலும்
நீட்டி முழக்கினாள்
அடுக்குமல்லி மணக்கும்
புழக்கடை
அத்தைப் பிரியம்
அம்மாவை விஞ்சும்
மாமனார்
உள்ளங்கை அன்புத்தெப்பம்
மச்சினர் குழந்தைபோல
சிரிக்க, சிரிக்கப்பேசுவார்
பொழுது போறதே தெரியாது
இந்த புழுக்கம் அங்க இல்ல
கிணற்றடிப் பக்கம்
சிலுசிலுன்னு காத்து
வாசலில்
வண்டிச்சத்தம் இல்லை
தூசு இல்லை, புகை இல்லை
காலையில் தார்சால்
குருவி, மைனாக்களின்
கீச்கீச்சில் விடியும்
பெரிய மரத்தடியில் வீடு
வீட்டுக்குள் மரக்கன்றுகள்
சின்னதும் பெரிசுமா
வாசல தாண்டினா கோயில்
வருஷமெல்லாம் திருவிழா
சொல்லி சொல்லி
கதைகள் வளர்த்துக் கொண்டே
இருந்தாள்
ரசம் சாதம்,
பருப்புத்துவையல், சுட்ட அப்பளம்
அம்மா எடுத்து வைக்க
பிசைந்து உண்ணும்
மைதிலியின் தட்டில்
கொஞ்சம் கண்ணீர் துளிகளும்
Labels:
கவிதைகள்
Tuesday, November 03, 2009
பறவை எழுதிய இறகு
புதிதாய்த் தெரிந்தது
அந்தப் பறவை
ஒரு பிடிகருனை அளவே
இருந்தது
இரண்டே வர்ணங்களில்
கருப்பும் வெள்ளையும்
உடலில் பூசி
கருப்பும் வெள்ளையும்
வர்ணங்கள் என்பதில்
உடன்பாடு தானே உங்களுக்கு!
நீண்ட அலகுடனும்
நீண்ட காலுடனும்
நீர் நிலை சார்ந்த
பறவையாய் இருக்கக்கூடும்
தரையில் வால் அடித்து
அடித்து தத்தியது
முன்னே நகர்ந்து பறக்காமல்
ஊர்ந்த பூச்சிகளை
லபக்கியது
என்ன பெயராய் இருக்கும்?
மீன் கொத்தி, கருங்கொக்கு,
மரங்கொத்தி?
எதுவோ என் பட்டியலில் இல்லை
என்னை கடந்து
சென்றவர்களைக் கேட்டேன்
அவர்களும் ஏதோ
பெயர் சொல்லி ஒரு கதையும்
சொன்னார்கள்,
பைரி என்றும்,
கல் நாரை என்றும் விதவிதமாய்
வலையில் தேடி,
புத்தகங்களில் தேடி
சலித்தேன் சிக்கவில்லை
அதன் சாயலில்
இல்லை
எந்த பறவையும்
இந்த கவிதைக்குள்ளும்
சிக்காமல் பறந்தது
ஒரு இறகை உதிர்த்து
கையில் எடுத்தேன்
இறகை
பச்சை, மஞ்சள், இளஞ்சிகப்பு,
நீலம் என வர்ணங்கள்
மாறிக்கொண்டே இருந்தது
இந்த கவிதை முடிந்த பின்னும் கூட.
இப்போது பறவை
என்ற அடையாளம்
போதுமானதாய் இருந்தது
எனக்கும் என் கவிதைக்கும்.
அந்தப் பறவை
ஒரு பிடிகருனை அளவே
இருந்தது
இரண்டே வர்ணங்களில்
கருப்பும் வெள்ளையும்
உடலில் பூசி
கருப்பும் வெள்ளையும்
வர்ணங்கள் என்பதில்
உடன்பாடு தானே உங்களுக்கு!
நீண்ட அலகுடனும்
நீண்ட காலுடனும்
நீர் நிலை சார்ந்த
பறவையாய் இருக்கக்கூடும்
தரையில் வால் அடித்து
அடித்து தத்தியது
முன்னே நகர்ந்து பறக்காமல்
ஊர்ந்த பூச்சிகளை
லபக்கியது
என்ன பெயராய் இருக்கும்?
மீன் கொத்தி, கருங்கொக்கு,
மரங்கொத்தி?
எதுவோ என் பட்டியலில் இல்லை
என்னை கடந்து
சென்றவர்களைக் கேட்டேன்
அவர்களும் ஏதோ
பெயர் சொல்லி ஒரு கதையும்
சொன்னார்கள்,
பைரி என்றும்,
கல் நாரை என்றும் விதவிதமாய்
வலையில் தேடி,
புத்தகங்களில் தேடி
சலித்தேன் சிக்கவில்லை
அதன் சாயலில்
இல்லை
எந்த பறவையும்
இந்த கவிதைக்குள்ளும்
சிக்காமல் பறந்தது
ஒரு இறகை உதிர்த்து
கையில் எடுத்தேன்
இறகை
பச்சை, மஞ்சள், இளஞ்சிகப்பு,
நீலம் என வர்ணங்கள்
மாறிக்கொண்டே இருந்தது
இந்த கவிதை முடிந்த பின்னும் கூட.
இப்போது பறவை
என்ற அடையாளம்
போதுமானதாய் இருந்தது
எனக்கும் என் கவிதைக்கும்.
Labels:
கவிதைகள்
Subscribe to:
Posts (Atom)