Wednesday, September 01, 2010

நிழல்-துரத்தி...

இறந்து போயிருந்தது

அந்த உடல்
முழுக்க வெள்ளை அங்கி
போர்த்தியிருந்தது
இடதுகையும் துர்நாற்றமும்
வெளியே கிடந்தது
இந்த கையை எங்கேயோ
பார்த்தது போல இருந்தது
விலக்கி பார்க்க
பயமாய் இருந்தது
அது நானாகவோ
அல்லது எனக்கு மிகவும்
பரிச்சயமான நீங்களாகவோ
இருக்கலாம் என்று.

2 comments:

'பரிவை' சே.குமார் said...

Athu sari.

kavithai payamuruththuthu manasai.

nalla sinthanai.

vazhththukkal.

சிவாஜி சங்கர் said...

நிழலாய் அலைகிறது மிக நெருக்கமான "சா" :)