Thursday, September 30, 2010

உள்ளீடு...

வார்ப்புகளில் உறங்கும்
குழிவுகளில்  ஒட்டி கொண்டு
சிதையும் மூளிக்கருவாச்சியின்
சுதைபொம்மைகளின் சாயலில்   
கிடக்கும் பணியாரங்கள்
சுட்டு அடுக்கி கொண்டிருந்தவளின்
வியர்வை விழுந்து உப்பு நிறையானது

4 comments:

காமராஜ் said...

ஆஹா ரம்மியமான சிந்தனை ராகவன்.பணியாரப்பாத்திரம் கதை சொல்லும் கருவாச்சியாவதும்.சுட்டு அடுக்கப்பட்ட பதார்த்தத்தில் விழும் வியர்வை ருசிகூட்டுகிறதும்.

க ரா said...

பணியாரம் ருசி மிகுந்தது ராகவன் :)

உயிரோடை said...

கொஞ்சம் புரியலை. உள்ளீடு என்று எதை சொல்கின்றீர்கள்

ராகவன் said...

அன்பு லாவண்யா,

பெங்களூர் வந்து சென்றது குறித்து பத்திரிக்கைகளில் படித்து தெரிந்து கொண்டேன். என்னாச்சு...

உள்ளீடு என்பது ingredient...nnu சொல்லலாம்.

அன்புடன்
ராகவன்