Thursday, September 24, 2009

இல், அறவாழ்வு










உன்
மௌனத்தையும்
காதல் பொதிந்த
வார்த்தைகளையும் நிராகரிக்கிறேன்

உன்
கவிதைகளையும்
காதோர கிசுகிசுப்பையும்
இடங்கையால் புறந்தள்ளுகிறேன்

உன்
பிடரி மயிர் ஒதுக்கி
பின்னங்கழுத்தில் இடும்
முத்தங்களில்
திராவகம் ஊற்றி பொசுக்குகிறேன்

உன்
தேநீர் ரசனைகளையும்
ஜன்னலோர நிலவுகளையும்
விழுங்கி சபிக்கிறேன்

உன்
வாழ்த்துக்களையும்
மலர்கொத்துக்களையும்
பாழ்வெளியில் எறிகிறேன்

நீ எப்போதாவது வீசும்
வசைசொற்க்களையும்
தகிக்கின்ற பார்வையையும்
எனது கேடயங்களாய் தரிக்கிறேன்

நீ மறந்த
பிறந்த தினங்களையும்
பரிசு பொருட்களையும்
திரட்டி கூராய் தீட்டி 
கொலை ஆயுதங்கள் ஆக்குகிறேன்

நீ ஓரிருமுறை
படுக்கையில் விலகி படுத்ததையும்
பார்ட்டியில் குடித்ததையும்
விஷமாக்கி கூர் ஈட்டிமுனை தடவுகிறேன்

வன்மம் வளர்த்து
போருக்கு சிலுப்பி
பூமியில் அறைகிறேன் எக்காளத்துடன் 

நீண்டு வளர்கிறது ஒரு நெடுங்கனவு....

3 comments:

மாதவராஜ் said...

அடேயப்பா.... அருமையான கவிதை. உங்கள் வலைப்பக்க பதிவுகளை மேலிருந்து ஒவோன்றாய் படித்து வரும்போது, இந்த இடத்தில் உறைய வைத்து விட்டீர்கள்.இனி தொடர்ந்து வருவேன். படிபேன். எனக்கு பிடித்தமானதாக கூகிளில் சேமித்துக் கொண்டேன். நன்றி.

ராகவன் said...

உங்கள் அன்புக்கு ஆயிரம் நன்றிகள்!!

உங்கள் மதிப்புரை, என்னை உற்சாகப்படுத்துகிறது... உங்களை உறைய வைத்தது எனக்கு ஒரு பெரிய அங்கீகாரம். தொடர்ந்து படிப்பேன் என்ற உங்களின் அக்கறைக்கும் நன்றிகள்!

ஒன்பதாம் மேகத்தில்,
ராகவன்

இரசிகை said...

viththiyaasamaayirukku...