Monday, December 20, 2010

கொட்டுக்கலமிசை...

வட்டறுத்து வலம் திருத்தி
சுட்டகலும் பிணி
கொன்று திங்கும்
எஞ்சியதாய் தின்று செழிக்கும்
செந்நாய்கள்
உலரும் கணங்களின் 
அரக்கப் பிடியுள் கொழுத்த இரவும் 
அண்டி ஒடுங்கிய
பினைக்காமன்
எரித்த மூன்றாம்
வாசல் திறந்தவனின் உட்புக
மந்தி கரையேறும்
செந்தீந்தழல் படுகை
கடந்து கரைந்த அகவிழி
திறந்த
புல்லான், புலையன், புண்கண் புரையோடி
நல்லார் பொல்லார் பொசுக்க
நமக்கென மீறும் பொடி
அப்பிய உடலெங்கும்
அதிர்ந்து இசைக்கும்
துந்துபியின் இலக்கத்தில் சொருகியது
செருவில் விடுத்த அம்பு

கொண்டான், புரண்டான், அழுதான்,
புழுதியில் தோய்ந்த
கெட்டித்த குருதி
வழிய பிட்டுத்திண்ணும்
சண்டியும்
கழற்றி எறிய
பிரதிஷ்டை அருள்
வளர்க்கும் கொம்பு, அப்பன்

3 comments:

வித்யாஷ‌ங்கர் said...

really wonder

'பரிவை' சே.குமார் said...

Arumaiya irukkungga...

உயிரோடை said...

இந்த கவிதையை ஓசையும் அழகா வந்திருக்கு. வாழ்த்துகள்