Wednesday, December 08, 2010

பிறவாமை...

காந்தமுள்ளின்
துடிப்புகளில் இருந்து
உதிரும் திசைகள்
சேமித்து வைத்திருக்கும்
நீட்சியில்
நேற்று இறந்த
காலத்தினை முனுமுனுத்தபடி
உதிர்த்த மணற்கடிகாரத்தின்
துகள்களில் தொன்மங்களின்
பிசுக்கு நிறைந்த
அகண்ட வெளிகளில்
சுழித்துக் கொண்டு ஓடும்
பால்வெளிப் படுகையில்
புதைத்து வைத்திருந்த
மூதாதையரின் உடற்சூடு
எண்ணெய்க் கொப்புளங்களாய்
குமிழியிடும் முட்டைகளில்
இருந்து மீண்டு வரும்
தலைபிரட்டைகள்
முட்டி துளையிடமுடியா
கதவுகள் அடர்ந்திருக்கும்
கோட்டைகளுக்குள்
உறங்கும் பெருக்கல்
குறியீடும் கவன் வில்லும்
பெருமூச்சுகளில்
எரிந்த பஸ்பத்தின் மீது
குதிக்கும், புரண்டாடும்
நேரத்தில் குறிகள் தளர
யோனிகள் சுருங்க
வெடித்துச் சிதறும்
அண்டங்கள் சிருஷ்டி
இழக்க ஸ்தம்பிக்கும்

3 comments:

'பரிவை' சே.குமார் said...

Kavithaiyai 2,3 murai padiththuthaan purinthathu...
ungal kavithaigalum kathaikalum ezuththu nadaiyil vinchi nirkinrana...
vaazhththukkal raagavan.

ராகவன் said...

அன்பு குமார்,

படிச்ச ஒரே ஆளு நீங்க தான்னு நினைக்கிறேன்... அன்புக்கும் தொடர் வாசிப்புக்கும் அன்பும் நன்றிகளும்...

அன்புடன்
ராகவன்

உயிரோடை said...

நன்றாக இருக்கு