Thursday, September 10, 2009

எமக்குத் தொழில்...

புத்தகம் போடும்
ஆசை
யாரை விட்டது
கட்டுகட்டாய்
காகிதங்கள், கவிதைகள்
பெரும்பாலும்
பிரசுரிக்க
தகுதியில்லையென்று
திரும்பி வந்தவை

இருந்தால் என்ன?
காசுள்ள மகராசன்
கவிதைகள் விற்பனைக்கு..

ஆயிரம்
பிரதிகள்
வளவள அட்டையில்
துகிலுரித்து
ஒற்றை சல்லாத்துணியை
நழுவவிட்டு
இடமுலை காட்டும்
பெண் இருக்க
முன்னூறு விற்றாலும்
போதும்
பதிப்பகத்திற்கு
பங்கு நிச்சயம்

மறுபதிப்பும்
போட்டு விட்டால்
போகிறது
மனைவியின்
நகைகள் கண்சிமிட்டி அழைக்கும்

விற்பனை பற்றி
கவலையில்லை
இருக்கவே இருக்கிறது
அரசு நூலகங்களும்
பள்ளிகளும்...

படைப்பாளி வேறு
படைப்புகள் வேறு என...
பாதிக்காது
என் படைப்புத் தொழில்
எப்போதும்...