கழிகிறது
பொழுதுகள்
கனவுகளும், கவிதைகளுமாய்..
தகிக்கிறது
உன் நினைவுகள்
சுடுமணலாய் விரிந்து
மூளையைத் தொடுகிறது...
சுவர் கடிகாரமுள்
நேரத்தை
கிழித்துக் கொண்டு
நகர்கிறது
உதிரும்
நிமிடங்களில்
குருதி வழிகிறது
அகண்ட இரவு
அரக்க கரங்களால்
குடல் உருவக் குனிகிறது
மலத்துடன்
குடல் சரிகிறது
நாட்கள்
பைசாசக் கால்களால்
இரக்கமில்லாமல்
விழி பிதுங்க
மிதிக்கிறது
இப்படியாக
எல்லாவற்றையும்
அள்ளி செருகிக்கொண்டு
ஓடும் காலின் கீழே
பூமி முன்னோக்கி
விரைகிறது
ஒரு
ஓட்ட பந்தயக்காரனாய்....
No comments:
Post a Comment