Tuesday, January 12, 2010

தோல்வி எழுதும் ஒரு நாட்குறிப்பு

முன்வழியும்
மரங்களின்
மயிர்க்கற்றைகளை
இழுத்து தாங்கும்
பிளவுபட்ட
கவன்வில் வளைவு

தூக்கணாங்குருவி
கூடுகளின்
தொங்கட்டான்
ஆட்டத்தில்
மேலேறி கீழிறங்கும் பூமி
கிறங்கி சரியும்
பாதைகள்

நடுவகிடு பிளந்து
கோதிச்செல்லும்
விரல்களில்
ஒட்டி வரும்
மகரந்த துகள்கள்
மீண்டும் உற்பவிக்கும்
பெயரறியா வசந்தத்தை

கொங்கைகள்
நடுவே வழியும்
வெள்ளைத் தாவணி
முனை பற்றி
தெப்பம் கட்டும்
மிதக்கும் ஏரி
புணர்ந்த கதை
வட்டவட்டமாய்
லஜ்ஜையின்றி

வளித்து எறிந்த
புகைக்குமிழியில்
வானவில் பூட்டி
மரங்களை
ஏற்றி
மாசு கொல்லும்
மலைமுகடுகள்

மலை உச்சியில்
உயிரை கழற்ற
நின்றவனை
காற்றுப்பைக்குள்
சுவாசம் நிரப்பி
தள்ளி விட்டது
வாழ்க்கைக்குள்
ஒரு வலிய கரம்

4 comments:

Gowripriya said...

அழகு வரிகள் :)

K Siva Karthikeyan said...

அருமை

S.A. நவாஸுதீன் said...

நல்லா இருக்கு ராகவன்

பா.ராஜாராம் said...

ஆம் ராகவன்,இப்படி எதாவது ஒரு கரம்தான் நம்மை எப்பவும் பொதிந்து வைக்கிறது.வெயில்,
.பனி,மூப்பு,பிணியிடமுருந்தும்..