Wednesday, August 19, 2009

சுந்தரின் கவிதைகள்..

உன் முகம்...

(1)களைத்து வீடுதிரும்பும் கூட்டத்தின் நடுவில்
ஓட்டுனரின் எரிச்சல் தெரியும் ஹாரன் ஒலியுடன்
முன்செல்லும் நடத்துனரின் முரட்டு தள்ளலில்
நிலைதடுமாறி நிமிர்ந்த வேளையில்
வேர்வை நனைந்த அக்குள்களின் கடைசியில்
வெட்கித்தெரிந்த உன் புன்னகை முகம்

தவறாமல் நினைவுக்கு வந்துவிடுகிறது,
என் மகளை கொஞ்சும்போது
...
அழுது பிரிந்த கடைசி முகம்,
மனைவியிடம் சண்டையிட்டு சோர்ந்த வேளைகளில்!



(2) பஸ்ஸோ ரயிலோ,
விமானத்தில் கூட,
புறப்படும் கடைசி நொடியில்
ஓடி வந்து ஏறிக்கொள்ள
ஆட்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்
...
தவற விடுவதர்க்கும் கூட!

No comments: