ஒரு மழையற்ற
மழைக்கால நாளில்அப்பா
அப்பா இறந்து போனார்
சம்பிரதாயமாய் வந்தவர்கள்
சந்தேகமாய் வந்தவர்களுடன்
சேர்ந்து
உறுதி செய்து கொண்டனர்
சந்தோஷமாயும்
சில பேர் வந்திருக்கக்கூடும்..
உரிமைக்கென்றும்
உதவிக்கென்றும்
சிலபேர்..
உற்றார் உறவினர்
மற்றார் எல்லோரும் ...
சவுண்டியும், வெட்டியானும்
அடுத்த
எழவுக்காய்
நேசமற்ற
பொழுதுகளை
காயடித்துக் கொண்டே....
No comments:
Post a Comment