Tuesday, November 02, 2010

அம்மாவின் சீலைகள்...

மாமா தீவாளிக்கு
சீலை எடுத்து தரமாட்டீயலா 
அக்காவுக்கு மட்டும் தானா?
சீலையா இல்ல மாமனா?
என்றவரை தாண்டி
தங்கையை முறைக்கும்
அம்மாவின் காதல்
***
சீலையா  அடுக்கி
வச்சிருக்கிறேனாம் பீரோல...
கூடப்பொறந்தவனுக்கே பொறுக்கல!
அவன்கெடக்கான்
தீவாளிக்கு ரெண்டு சீலையா
வாங்கிக்கோ என்பார் அப்பா 
***
நேர்ச்சைக்கு
அம்மனுக்கு சார்த்த
எடுத்த பச்சைச்சீலையில்  
அழகாய் தெரிந்தாள் அம்மா!
***
அம்மாவின்
பழஞ்சீலைகள்  
தேன்சிட்டுக்களின் உதிர்ந்த
இறகுகளில் நெய்யப்பட்டவை
விரல்கள் முளைத்து 
கிறங்க  தலைகோதும் 
மழை நேர தேநீராய் 
மூளை தொடும் நினைவுகளில்
கை சூம்பி உறங்கும் நான்  
 ***

6 comments:

'பரிவை' சே.குமார் said...

கவிதை ரொம்ப அருமையா இருக்கு.
//விரல்கள் முளைத்து
கிறங்க தலைகோதும்
மழை நேர தேநீராய்
மூளை தொடும் நினைவுகளில்
கை சூம்பி உறங்கும் நான் //

இதில் லயித்'தேன்'.

பாலா said...

arumainne

க ரா said...

கடைசி கவிதை நானேதான் ராகவன்.. நன்றி :)

Philosophy Prabhakaran said...

எல்லாமே கலக்கல்.... கடைசி கவிதை அருமையிலும் அருமை...

உயிரோடை said...

கவிதைகள் எல்லாம் நல்லா இருக்கு ராகவன்

பத்மா said...

அம்மா அம்மாதான்
ராகவன் ராகவன் தான் ..
சீலைச்சூடு பரவும் கவிதை